வவுனியாவில் தந்தை செல்வாவின் 44 வது நினைவுதினம் அனுஸ்டிப்பு
வவுனியாவில் தந்தைசெல்வாவின் நினைவுதின நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டுக்கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தைசெல்வா நினைவுத்தூபியில் இன்று (26.04.2021) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தமிழரசு கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் அன்னாரது சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் அதன் பின்னர் ஏனையவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா,ரி.கே.ராஜலிங்கம் மற்றும் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை