இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி ரூ. 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உருளைக் கிழங்கு அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன். இம்முறை அமோக அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி இன்று நள்ளிரவு (27) முதல் அமுலாகும் வகையில், , ஒரு கிலோகிராமுக்கு ரூபா 50 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.