கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட கல்முனை ,சாய்ந்தமருது பகுதிகளில் திடீர் சுகாதார சுற்றிவளைப்பு

 

கொவிட் -19 பரவல் நாட்டில் கடுமையாக பரவிவரும் சூழ்நிலையில் சுகாதார வழிமுறைகளை பேணி நடக்குமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கமைய கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட கல்முனை ,சாய்ந்தமருது பகுதிகளில் பிராந்திய சேவைகள் பணிமனை
பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணன் தலைமையில் சுகாதார சுற்றிவளைப்பொன்று இன்று (27) நடைபெற்றது.

சுகாதார துறை ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் பின்பற்றாமல் ,
முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பேணாமல் நடமாடி திரிந்த பலர் திடீர் சுற்றிவளைப்பின் போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

கல்முனை,சாய்ந்தமருது பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கல்முனை பொலிஸார், பாதுகாப்பு படை அதிகாரிகள், சுகாதார துறை ஊழியர்கள் ஆகியோர் இணைந்து இவ் ந்டவடிக்கையினை மேற்கொண்டனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.