சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இலங்கையை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர், கடந்த ஒக்டோபரில் சீன மூத்த இராஜதந்திரி யாங் ஜீச்சியின் (Yang Jiechi) வருகையைத் தொடர்ந்து சீன அதிகாரி ஒருவர் மேற்கொண்ட இரண்டாவது மிக உயர்ந்த பயணமாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.