வடக்கில் 12 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று (புதன்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 660 பேரின் மாதிரிகள் புதன்கிழமை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 13 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் கரவெட்டி, வேலணை மற்றும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தலா ஒருவருக்கும் என சுயதனிமைப்படுத்தலில் இருந்த 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம்இ யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும், வெளிநோயாளர்.

பிரிவில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கும் என இரண்டு பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அத்துடன்  யாழ்ப்பாணம் சிறைச்சாலைக் கைதிகள் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.