நீதிமன்ற நடவடிக்கைகளை 5 நாட்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானம்!

நீதிமன்ற நடவடிக்கைகளை ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் யூ.ஆர்.டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அன்றைய தினங்களில் சந்தேகநபர்கள் மற்றும் பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.