இதன்போது கருங்கற்களிற்குள் மறைக்கப்பட்ட நிலையில் முதிரை குற்றிகளை கடத்திச்செல்ல முற்பட்டமை தெரியவந்தது. காவற்துறையினரை கண்டதும் மரக்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களையும், 43 முதிரைக்குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பிச்சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.
கருத்துக்களேதுமில்லை