பருத்தித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

கஞ்சா போதைப்பொருளை வீட்டில் பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை பருத்தித்துறை இன்ப சிட்டியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் கூறினர்.

சந்தேக நபரிடமிருந்து 95 கிலோ கிராம் கஞ்சா போதைப்போருள் கைப்பற்றப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.