ஜீவன் தொண்டமான் – கூட்டமைப்பு நா.உறுப்பினர்கள் சந்திப்பு;தேர்தல் முறைமை குறித்து ஆய்வு

புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொகுதி வாரியான தேர்தல் முறைமையில் தமிழ் பிரதிநிதிகள் எவ்வாறு தமது மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது மற்றும் பாதுகாப்பது தொடர்பாக இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.