கல்குடா வலயத்திலிருந்து மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு மாணவி

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப்பரீட்சை முடிவுகளின்படி உயிரியல் விஞ்ஞான பிரிவில் 2AB (பௌதீகவியல்-A ,இரசாயனவியல்-A ,உயிரியல்-B) என்ற பெறுபேற்றில் மாவட்ட நிலையில் 06ம் நிலையை பெற்று கிருபைரெத்தினம் ஜெயந்தினி என்ற இம்மாணவி பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அத்தோடு இம் மாணவியே இப் பாடசாலையில் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது மாணவி என்பதும் ,கல்குடா வலயத்தில் மருத்துவ துறைக்கு இம்முறை தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாவடிவேம்பை சேர்ந்த கிருபைரெத்னம் நாகம்மா தம்பதிகளின் மகளான ஜெயந்தினி கஷ்ட குடும்ப பின்னணியை கொண்டவர் .

இவ்வாறான சூழலில் தனது கல்வியை தொடர்ந்து மாவட்டத்தில் 06ம் இடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்ததோடு எதிர்கால மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.