மொனராகலை நகரத்தை முடக்க தீர்மானம்!

மொனராகலை நகரம், நாளை (புதன்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு முடக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொனராகலை பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவே குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது மொனராகலை நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சடுதியாக அதிகரித்துள்ளமையின் காரணமாகவே இந்த திடீர் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.