தங்க பிஸ்கட்டுக்களைக் கடத்த முயன்ற இலங்கையரொருவர் விமான நிலையத்தில் பொலிஸாரால் கைது
18 தங்க பிஸ்கட்டுக்களைக் கடத்த முயன்ற இலங்கையரொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான குறித்த நபர் இன்று காலை 10.00 மணியளவில் ஓமான் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாகவும் மேலதிய விசாரணைக்காக அவர் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை