பயணத்தடை விதிப்புக்களால் ஆடைத்தொழிற்சாலை செயற்பாடுகளுக்கு தடையில்லை…

கொவிட் 19 தொற்றுக் கட்டுப்பாட்டுக்காக பயணத்தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், சுகாதார
வழிகாட்டல்களுக்கமைய ஆடைத் தொழிற்சாலை செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கொவிட்
19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர
சில்வா அவர்கள் அறிவித்துள்ளார்.
ஆடை உற்பத்தி, விநியோகம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி போன்ற நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு
உயிர்குமிழி (Bio-Bubble) முறையை பின்பற்றி செயற்பட முடியும் என அவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.