பருத்தித்துறை மீன் சந்தைக்கு பூட்டு

பருத்தித்துறை மீன் சந்தை சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலில் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் மூடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக சந்தைகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.