மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து இன்று (18) காலை முதல் மேலும் சில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் மேலும் சில பிரதேசங்கள் இன்று (18) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்தும் முகமாக 2 மாவட்டங்களை சேர்ந்த 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 4 மாவட்டங்களை சேர்ந்த 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.