மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது

 (க.சரவணன்)
மட்டக்களப்பு நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்திய 10 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த 10 பேரும் அஞ்சலி செலுத்தியதை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்துள்ளதை தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்துவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த நினைவேந்தல் நிகழ்வை தலைமைவகித்து செய்திருந்த லவக்குமார் என்பவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு அவருடைய வீட்டிற்கு 3 தடவைகள் பொலிசார் சென்ற போது அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரின் மனைவியார் அதனை பெற மறுத்துள்ளதற்கமைய வீட்டின் கதவில் அந்த நீதிமன்ற தடை உத்தரவை பொலிசார் ஓட்டியுள்ளனர். இந் நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட லவக்குமார் இன்று பகல் 10 பேருடன் சென்று நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச்சுடர் ஏற்றி அதன் பின்னர் பூக்களை கடலில் தூவி அதனை படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை 3 நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியினை பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.