நாகப்பாம்புக்கே பயப்படாத நான் நாக்குளி பாம்புகளுக்கு பயப்பட போவதில்லை : காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில்

நாகப்பாம்புக்கே பயப்படாத நான் நாக்குளி பாம்புகளுக்கு ஒரு போதும் பயப்பட போவதில்லை. நான் இங்கு அரசியல்வாதி இல்லை ஒரு அதிகாரி என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி. ஜெயசிறில் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று(18)  சபா மண்டபத்தில் பிரதேச சபையின் தவிசாளர் கி. ஜெயசிறில்  தலைமையில் நடைபெற்ற போதே அவர் தனதுரையில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தனதுரையில் “சில உறுப்பினர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் சட்டதிட்டங்கள் தெரிவதில்லை. இந்த சபைக்கு ஆளுமையான சிலரை மக்கள் தெரிவு செய்திருந்தாலும் ஆறுதல் பரிசில் வந்த சிலர் விளம்பர அரசியலையே செய்துகொண்டிருக்கிறார்கள்”என்றார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.