நேற்று 38, 263 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன!
இலங்கையில் நேற்று 38, 263 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, அஸ்ட்ராசெனெகா இரண்டாம் மாத்திரை தடுப்பூசிகள் 5,229 பேருக்கும், சினோபாம் முதலாம் மாத்திரை தடுப்பூசிகள் 33, 017 பேருக்கும் வழங்கப்பட்டிருப்பதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்று ஸ்புட்னிக்-வீ தடுப்பூசி 17 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 297, 686 பேருக்கு கொவிசீல்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளின் இரண்டாம் மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 457, 840 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாம் மாத்திரையும், 14, 917 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாம் மாத்திரையும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை