சட்டவிரோத மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் முதிரைமரக்குற்றிகளை கடத்திச்சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த காவல்துறையினர் ,
இன்று (19) காலை வேலங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்நோக்கி மரங்களை ஏற்றிச்சென்ற வாகனத்தினை பம்பைமடுவில் கடமையில் நின்ற காவல்துறையினர் வழிமறித்து சோதனையிட்டனர்.
சம்பவத்தில் மரங்களை ஏற்றி வந்த வாகனச்சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மரங்களை கடத்தியதற்கு பயன்பட்ட வாகனத்தையும், 13மரக்குற்றிகளையும் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை