வவுனியாவில் கொரோனா தொற்றால் 64வயது பெண் மரணம்

வவுனியாவில் கொரோனா தொற்றால் 68 வயது பெண் ஒருவர் இன்று (20) மரணமடைந்துள்ளார்.

வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட பி சீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் குறித்த பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.