சட்ட விரோதமாக மதுபான விற்பனை;ஏழு பேர் கைது

பயணத்தடை அமுலில் உள்ள வேளையில் சட்டவிரோதமாக மது பானத்தை வைத்திருந்த, சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட மற்றும் தொற்றை கட்டுப்படுத்த அரசினால் அமுல்ப்படுத்தப்படும்  பயணத் தடை காலத்தில் மதுபானத்தை விற்பனைக்கு தயாராக வைத்திருந்த ஏழு பேர் கைது சாவகச்சேரியில் மதுவரி திணைக்களத்தினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

உதவி மதுவரி ஆணையாளர் என்.சொதிநாதன்,மதுவரி அத்தியட்சகர் ரீ.தங்கராஜா ஆகியோரின் அறிவுறுத்தலில் பொறுப்பதிகாரி அசோகரத்தினம் தலைமையில் மதுவரி பரிசோதகர் வே.றசிகரன் தலைமையிலான குழுவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் – சாவகச்சேரியில் நேற்று இரவு  மேற்கொண்ட இந்த  சுற்றிவளைப்பின் போது  750 மி.லீ 30போத்தல்கள்,180 மி.லீ 25 போத்தல்கள்,500 மி.லீ பியர் 100 ரின்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் போது ஏழு சந்தேகநபர்களையும் மதுவரித் திணைக்களத்தினர் கைது செய்துள்ளதுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சாவகச்சேரி மது வரி  திணைக்களத்தினரால் சட்ட நவடிக்கை உட்படுபடுத்தப்படவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.