மதுபானத்தை பதுக்கி வைத்திருந்த இளைஞன் கைது!
சந்தேக நபரிடமிருந்து 399 போத்தல்களில் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று காவற்துறையினர் குறிப்பிட்டனர்.
சுன்னாகம் சபாபதிப்பிள்ளை ஒழுங்கையில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தனது வீட்டில் மதுபானத்தை பதுக்கிவைத்திருந்து பயணத்தடை காலப்பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார் என்று கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தற்போது சுன்னாகம் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவர் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவார் என்று காவற்துறையினர் கூறினர்.
கருத்துக்களேதுமில்லை