வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு நகரசபையினரினால் தடை – பறிமுதல் செய்யப்பட்ட மரக்கறிகள்

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு வவுனியா நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தாக்கத்தை கருத்திற்கொண்டு வவுனியா நகரசபையினரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்ட நிலையில் நகரசபையின் தடையுத்தரவினை மீறி வீதியோர நடவடிக்கையி்ல் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நகரசபையினர் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது வீதியோரத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர்களின் மரக்கறிகள் பொருட்களை நகரசபையினர் ஏற்றிச்சென்றதுடன் அவர்களுக்கு தண்டப்பணமும் விதித்தனர்.

வீதியோரத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடவர்களின் மரக்கறிகள் பல பாவனைக்கு ஒவ்வாத வகையில் அழுகிய நிலையிலும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்