வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட வாகன பயண அனுமதிகளை தவறாக பயன்படுத்திய மூவர் கைது

பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள துறையை முறைகேடாக பயன்படுத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருவாத்தோட்ட பொலிசாரினாலும் விஜேராம பகுதியிலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வைத்தியர்களுக்கான இலட்சினையை பயன்படுத்தி வாகனங்களில் இவர்கள் பயணித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரைக் கண்காணிப்பதற்காக ட்ரோன் இயந்திரங்களும் பயன்படுத்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.