எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகள் முடக்கம்

(க.கிஷாந்தன்)

கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்குட்பட்ட எட்டியாந்தோட்டை கிராம சேவகர் பிரிவு மற்றும் கரா கோட்டை கிராம சேவகர் பிரிவு ஆகியன இன்று (29.05.2021) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் கடந்த 26ம் திகதி 86 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இந்த கிராம சேவகர் பகுதியில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்னும் சிலருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.