நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை…

நாட்டில் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை ,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில்  பலத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் மேற்கு சரிவுகளிலும், வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மேற்கு பகுதியிலும் சில நேரங்களில் காற்றின் வேகம் 40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும்.

எனவே இடியுடன் கூடிய மழைக்காலங்களில் காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.