மாணிக்ககல் அகழ்விற்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

மாணிக்ககல் அகழ்விற்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பி வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ கீழ் பிரிவை சேர்ந்த 46 வயதுடைய செல்லப்பன் சங்கர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (30) இரவு பொகவந்தலாவை கீழ் பிரிவு பகுதியிலுள்ள மரக்கறி செய்கை பண்ணை பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்விற்கு சென்ற போது அப்பகுதியில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பி வேலியில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பிரதேசவாசிகளினால் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார், சட்டவிரோத மின்சார வேலி அமைத்தவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் சடலத்தை பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.