அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும், எதிர்வரும் 7 ஆம் திகதிவரை பூட்டு

நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும், எதிர்வரும் 7 ஆம் திகதிவரை முத்திரையிட (சீல் வைப்பதற்கு) மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் உடன் அமுலாகும் வகையில் முத்திரையிட(சீல் வைக்க) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் 7 ஆம்திகதிவரை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்