நீர் இறைத்து குடிக்கும் குட்டி யானை

யானைகளுக்கு நுண் உணர்வு மிகவும் அதிகம். அது இயல்பாக, வேகமாக அனைத்தையும் கற்றுக் கொள்ளும் தன்மை கொண்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் பல காலங்களில் நிரூபித்து உள்ளனர்.

அதற்கு ஏற்ற வகையில் பல சூழல்களில் நாம் அது தொடர்பான காணொளிகளையும் செய்திகளையும் பார்த்தும் கேட்டும் வருகின்றோம்.

மேற்கு வங்க மாநிலம் அலிபுர்தூர் பகுதியில் அமைந்துள்ளாது ஜல்தபாரா என்ற காட்டுப் பகுதி.

அங்கு கோடை தாக்கம் தாங்க முடியாமல் சுற்றித் திரிந்த குட்டி யானை ஒன்று, அங்கிருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள அடிகுழாயில், பம்பை அடித்து தண்ணீர் குடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.