அதிக மதுபான போத்தல்களை வாங்கி சென்றவர் கைது !

யாழ்ப்பாணத்தில், இன்று (21) காலை, அதிகமான மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொள்வனவு செய்து எடுத்துச் செல்ல வேண்டிய அளவுக்கு அதிகமாக மதுபான போத்தல்களை வாங்கிச் சென்ற குற்றச்சாட்டிலேயே, குறித்த நபர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.