கடன் பணத்தை கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் – கோண்டாவில் காளி கோவிலடியில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றது.

சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே சம்பவத்தில் படுகாயமடைந்தார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.