முல்லைத்தீவு , மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் மேலும் 7 பேருக்கு கொரோனா!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட நாயாறு பகுதியில் பருவத்தொழிலுக்கு வருகைதரும் மீனவர்கள் இங்கு குடியிருக்க அனுமதி வழங்கப்படாத நிலையிலும் அவர்கள் கடற்கரை பகுதிகளில் வாடிகளை அமைத்து அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்து மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வந்தனர்.
தற்போதைய கொரோனா அபாய சூழலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்றுப் பகுதியில் அதிகளவான தென்பகுதியினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் மிகவும் நெருக்கமாக சுகாதார அறிவித்தல்களை பேண முடியாத நிலையில் எதுவித சுகாதார கட்டுப்பாடுகளும் இன்றி குடியிருந்த நிலையில் இவர்களில் 28 பேருக்கு கடந்த 29 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களை கொரோனா மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக சுகாதார பிரிவினர் பேருந்தினை கொண்டு சென்றபோது அவர்கள் மருத்துவமனை செல்ல மறுப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர் . இந்நிலையில் நாட்டில் உள்ள சட்டத்தினை பயன்படுத்தி சுகாதார பிரிவினரின் கட்டளைக்கு அமைவாக நீண்ட நேரத்தின் பின்னர் 5 பேரையும் கொவிட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.
கருத்துக்களேதுமில்லை