கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் ஆறாவது நாளாக போராட்டம்

கடந்த 08.07.21 அன்று கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் நடத்திய ஆர்ப்பாட்த்தின் போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு கேப்பாபுலவு விமானப்படை தலைமையக தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பௌத்த மத தலைவர்கள் இருவர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பில் இருந்து கொண்டு தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை இன்று(14) ஆறாவது நாளாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

அந்தவகையில் 14.07.21 இன்றும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தவாறு போராட்டத்தை தொடர்கின்றனர்.

இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து வெளியிடுகையில் இந்த அரசு தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களை விடுவிக்காவிடின் இதனிலும் விட பாரிய செயற்பாட்டிற்கு போகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த அரசு சுகாதார வழிமுறைகளை பாவித்து மக்களின் போராட்டங்களை நசுக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் அரசாங்கம் என்ன செய்கின்றது என்று நாங்கள் பார்த்து தீர்மானம் எடுப்போம் இந்த நாட்டில் மக்கள் எங்களுக்காக போராடுகின்றார்கள். மக்களுடன் நாங்கள் இணைந்து இந்த நாட்டில் ஜனநாயகம் சுதந்திரத்தை வெல்வதற்காக போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.