யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் மேலும் 40 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வல்வெட்டித்துறை- வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை), 209 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.