ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம் – டிலும் அமுனுகம

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அனைவரும் செல்லக்கூடிய வகையில் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இன்று (17) முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரம் உட்பட பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஓகஸ்ட் 01 முதல் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என டிலும் அமுனுகம குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.