கடற்றொழில் அமைச்சருக்கு திராணி இருந்தால் கடலட்டைப் பண்ணைக்கு என்னென்ன அனுமதி எப்போது வழங்கப்பட்டது என வெளியிடட்டும்-சிறிதரன்

அட்டைப் பண்ணைகள் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்ற இந்த கும்பல் முதலில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்தி சட்டத்தின் படி நீதியின் படி உரிய ஆவணங்களை திராணி இருந்தால் நான் இப்பொழுதும் கடற்றொழில் அமைச்சரிடம் சவால் விடுகிறேன் அவருக்கு திராணி இருந்தால் அவர் இந்த கௌதாரி முனையிலே அமைக்கப்பட்ட கடலட்டைப் பண்ணைக்கு என்னென்ன அனுமதிகள் எப்போது வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர் உடனடியாக வெளியிடட்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

கடலட்டை பண்ணை விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடலட்டை பண்ணை உருவாக்குவது தொடர்பில் மஹிந்த அமரவீர கடற்றொழில் அமைச்சராக இருந்த போது 2017 மார்ச் 8ம் திகதி அரச வர்த்தமானியில்  விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதிலே கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களையும் விட அதிகமான பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக 11 இடங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் கடலட்டை பண்ணைக்கு பொருத்தமான இடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலட்டை குஞ்சுகளை உருவாக்குவதற்காக அரியாலையில்  கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் ,அப்பகுதி பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்பட்ட பின்னரே இரண்டு பரப்பு காணிக்குள் கடலட்டை உற்பத்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்ய யாழ் மாவட்டத்தில்அனுமதி பெற்றவர்கள்  அதனைத் தாண்டி கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கெளதாரிமுனைக்கு வந்து இரண்டு ஏக்கரை  வலுக்கட்டாயமாக பிடித்து அப்பகுதி மீனவ சங்கங்களின் அனுமதி, பிரதேச செயலக அனுமதி இல்லாமல்இன்னொரு நாட்டை சேர்ந்த நிறுவனம்  இடத்தை பிடிக்கும் என்றால், அதற்கெதிராக முறைப்பாடு செய்து அறிவித்தும்  இதுவரை அவர்கள் கைது செய்யப்படாமல் இருக்கின்றார்கள் என்றால் இந்த நாட்டினுடைய சட்டம் இந்த நாட்டின் நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டியுள்ளது

இந்த நாட்டிலே கடற்றொழில் துறைசார்ந்த அமைச்சரும் அவரோடு சேர்ந்த அடியாட்களும் இந்த அநியாயமான வேலைத் திட்டத்தை நிறுத்தி நாங்கள் இந்த மக்களுடைய வாழ்க்கையை சரியாக கொண்டு செல்ல வேண்டும் மக்களுடையபொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமே தவிர அட்டைப் பண்ணைகள் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்ற இந்த கும்பல் முதலில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்தி சட்டத்தின் படி நீதியின் படி உரிய ஆவணங்களை திராணி இருந்தால் நான் இப்பொழுதும் கடற்றொழில் அமைச்சரிடம் சவால் விடுகிறேன் அவருக்கு திராணி இருந்தால் அவர் இந்த கௌதாரி முனையிலே அமைக்கப்பட்ட கடலட்டைப் பண்ணைக்கு என்னென்ன அனுமதிகள் எப்போது வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர் உடனடியாக வெளியிடட்டும்

அப்படி என்றால் அமைச்சருடைய நேர்மையையும் பொறுப்புக் கூறலையும் அவர் இலங்கையினுடைய சட்டத்தை மதிக்கின்ற தன்மையையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கின்றோம்–என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.