வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவி விலகல்

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக, கோணலிங்கம் கருணானந்தராசா, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

இதற்கமைய, ஜூலை 31ஆம் திகதியுடன் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக, அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோணலிங்கம் கருணானந்தராசா, அந்தக் கட்சியின் நகர சபை தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில், தமிழ்த் தேசிய கட்சியை எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் ஆரம்பித்த நிலையில், அவர்களுடன் இணைந்து செயற்படுவதால், தமிழரசுக் கட்சி அவரை வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தது. எனினும் அது பின்னர் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நகர சபை தவிசாளர் பதவியை தொடர விரும்பாத காரணத்தால், பதவி விலகுகின்றேன் என்று, கோணலிங்கம் கருணானந்தராசா அறிவித்துள்ளார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.