நாட்டில் மேலும் 843 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்
நாட்டில் மேலும் 843 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .
அதன்படி 256,676 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 283,512 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 3,733 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை