சுவாமி விபுலானந்தரின் நினைவுதினம் அனுஸ்டிப்பு
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 74 வது நினைவு தினம் வவுனியா கண்டி வீதியில் உள்ள அவரது சிலைக்கு முன்பாக இன்று (19) காலை அனுஸ்டிக்கப்பட்டது.வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில். அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து விபுலானந்தர் தொடர்பான நினைவு பேருரையினை வவுனியா தமிழ்சங்கத்தின் தலைவர் தமிழருவி சிவகுமாரன் ஆற்றியிருந்தார்.நிகழ்வில் நகரசபை செயலாளர், நகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுஅமைப்புகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை