நல்லூரில் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

யாழ்ப்பாணம்- நல்லூர் ஆலயத்துக்கு அருகில், அண்மையில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி நல்லூர் ஆலயத்துக்கு அருகில் திருடப்பட்ட நகைகளில் (20 இலட்சம் ரூபாய்) பெரும்பாலானவை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய யாழ்ப்பாணம்  குற்றத் தடுப்பு பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், நாவற்குழியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபரிடமிருந்து 7 தங்கப் பவுண் தாலிக்கொடி, நெக்ளஸ், ஒரு தங்கப் பவுண் அளவுடைய 3 சங்கிலிகள், 3 சோடி தோடுகள், ஒரு மூக்குத்தி,  2 மோதிரங்கள், பெறுமதி வாய்ந்த அலைபேசி ஒன்று மற்றும் 2 பவுண் தங்க நகையை விற்பனை செய்த சிட்டை என்பன கைப்பற்றப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நாளை முற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.