மகாராஜா நிறுவன உரிமையாளர் ராஜ மகேந்திரன் காலமானார்!
மஹாராஜா நிறுவனத்தின் தலைவர் ,முகாமைத்துவ பணிப்பாளர் கிளி ராஜாமஹேந்திரன் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.
இவர் சக்தி, சிரச , எம் .டி.வி ஆகிய ஊடகங்களை இலங்கையில் உருவாக்கி சுதந்திர ஊடகத்தின் பாதுகாப்பை வழி நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கிய இவரது மரணம் ஒரு பேரிழப்பாகும்.
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு tamil cnn குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அன்னார் ஆத்மாசாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.
கருத்துக்களேதுமில்லை