ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிபுரிந்த மேலும் இரு பெண்களின் மர்ம மரணம் அம்பலம்!

ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிபுரிந்த போது உயிரிழந்த 16 வயதுச் சிறுமியைத் தவிர்த்து, ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த மேலும் இரண்டு பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக, விசாரணைகளை மேற்கொள்ளும் சிறப்பு பொலிஸ் குழு தெரிவித்துள்ளது.

குறித்த இரு பணிப்பெண்களில் ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதுடன், மற்ற பெண் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற தகவல்கள் குறித்து பொலிஸ் சிறப்புக் குழு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், ரிஷாட்டின் வீட்டிற்கு குறித்த தரகரால் வேலைக்கு அழைத்து வரப்பட்ட 11 பெண்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் நேற்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும், மீதமுள்ள எட்டு பெண்களிடமும் அவர்கள் எந்தவிதமான துன்பம், பாலியல் துன்புறுத்தல் அல்லது வேறு எந்த வகையான கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்களா என்று விசாரிக்க,

மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோக பிரிவின் நிலையப் பொறுப்பதி பொலிஸ் பரீட்சகர் வருனி கேசலா போகஹவத்த மற்றும் மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பல அதிகாரிகளும் கொழும்புக்கு வந்திருந்தனர்.

இந்த அணி கொழும்பு தெற்கு பிரதேச குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளிலும் இணைந்தது ஏனைய 8 பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் அறிக்கைகள் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.