கல்முனை வடக்கு சுகாதார பிரிவில் இரண்டாம்கட்ட தடுப்பூசிகள் செலுத்தும் பணி

 

[காந்தன் ]

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவில் உள்ள 13 சுகாதார வைத்தியபிரிவுகளில் இரண்டாவது தடவையாக கிடைக்கப் பெற்ற தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இன்று (29)முதல்ஆரம்பிக்கப்பட்டுள்ளது

 

அந்த வகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர்
வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை வடக்கு சுகாதார அலுவலக பிரிவில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இன்று தொடக்கம் (29ம் திகதி முதல் -ஆகஸ்ட் 01ம்திகதி வரை)இடம்பெறவுள்ளது.

சுகாதார பிரிவில் 04 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பொது மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக் கொண்டனர்.

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.