மலசலகூடம் அமைக்க நிதி உதவி…

இஸ்லாமிய புது வருடத்தின் தொடக்க நாளானா இன்று(11) MBM FOUNDATION இன் ஸ்தாபகத் தலைவரும் சட்டக் கலாநிதியும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்ட விரிவுரையாளரும் பிரபல சட்டத்தரணியும் பிரபல அரசியல் ஆய்வாளருமான பௌமி முஹைதீன் அவர்களின் சொந்த நிதியிலிருந்து நெடுந் தீவு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஏ.கே.எம். சிஹாஜீர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் மலசலகூட புனர்நிர்மாணத்திற்காக 25 000 ரூபா   MBM FOUNDATION இன் இணைப்பாளரும் பிரபல ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான இர்சாத் இமாமுதீனால் கையளிக்கப்பட்டது.
அதேவேளை நடுஊற்று மஸ்ஜிதுல் ஸாலிஹ் பள்ளிவாசல் கழிவறை நிர்மாண பணிக்கான மீதித் தொகையும் இன்று (11)வறுமை ஒழிப்பு மன்றத்தின் தலைவரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான உமரழி ரணீஸிடம் கையளிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.