முல்லையிலிருந்து மடுவிற்கு பக்தர்கள் யாத்திரை…
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலுமிருந்து மடுமாதா திருத்தலத்திற்கு, பக்தர்கள் பலரும் தலயாத்திரை மேற்கொண்டுவருகின்றனர்.
இவ்வாறு யாத்திரை பயணத்தை மேற்கொண்டுள்ள பக்தர்கள் தற்போதைய கொவிட் – 19 நிலையினைக் கருத்தில்கொண்டு, சுகாதாரவழிமுறைகளைப் பின்பற்றியே தமது யாத்திரைப் பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின், இரணைப்பாலை, வண்ணாங்குளம், தீர்த்தக்கரை, முள்ளியவளை, கூழாமுறிப்பு, மாமூலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இவ்வாறு தலயாத்திரை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை