வல்வை நகரபிதாவிற்கு, முல்லை கரைதுறைப்பற்று பிரதேசசபையில் அஞ்சலி.

கொவிட் தொற்றுக்காரணமாக உயிரிழந்த யாழ் – வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசாவிற்கு முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசபையில் அஞ்சலிசெலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுபிரதேசசபையின் ஆகஸ்ட் மாதத்திற்கான அமர்வு 13.08.2021 நேற்று இடம்பெற்றது.

இந் நிலையில் கொவிட்தொற்றால் உயிரிழந்த வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணனந்தராசாவின் அத்மசாந்திக்காக ஒருநிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாதாந்த சபைஅமர்வின் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.