கல்முனையில் கனரக வாகனம் விபத்து வர்த்தக நிலையம் பலத்த சேதம் !
August 17th, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.
( எம். என். எம். அப்ராஸ்)
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணித்த கனரகவாகன மொன்று வீதியை விட்டு விலகி இன்று (17)அதிகாலை விபத்துக்குள்ளாகியது.
கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் அருகாமையில் இவ் விபத்து இடம்பெற்றது .
குறித்த பிரதான வீதியின் அருகில் காணப்பட்ட மின் கம்பத்தில் கன ரகவாகனம் மோதி மின் கம்பம் சேதமடைந்ததுடன் மேலும் இதன் அருகில் காணப்பட்ட தனியார் வர்தக நிலையமொன்றில் மோதியதுடன் வர்தக நிலையத்தின் முன் பகுதி பலத்தசேதமடைந்தது இவ் விபத்து குறித்து கல்முனை பொலிஸார் விசாணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை