ஒருவாரகாலத்திற்கு சுயமாக முடங்கும் முள்ளியவளை; வர்த்தக நிலையங்களை மூடிவைக்க முடிவு…

முல்லைத்தீவு – முள்ளியவளை வர்த்தகசங்கத்தின் கீழுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் ஒருவாரகாலத்திற்கு மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக வர்த்தக சங்கத் தலைவர் தம்பு தேவராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த 19.08.2021அன்று முள்ளியவளை வர்த்தகசங்க நிர்வாகிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 22.08.2021ஞாயிற்றுக் கிழமையிலிருந்து, 28.08.2021சனிக்கிழமைவரையில் முள்ளியவளை வர்த்தகசங்கத்தின் கீழுள்ள வர்த்தகநிலையங்கள் அனைத்தையும் சுயமாக முடக்கத் தீர்மானித்துள்ளோம்.

அதற்கமைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும், மருந்தகங்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படும்.

தற்போது நிலவும் கொரோனாப் பெருந்தொற்று நிலைமையினைக்கருத்தில் கொண்டே இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது – என்றார்.

மேலும் எதிர்வரும் 21.08.2021 சனிக்கிழமை தொடக்கம், 27.08.2021 வெள்ளிக்கிழமைவரையில் புதுக்குடியிருப்பு வர்த்தகசங்கத்திற்குட்பட்ட, வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடவுள்ளதாக ஏற்கனவே புதுக்குடியிருப்பு வர்த்தகசங்கமும் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.