மலையகத்தில் ஊரடங்கு மத்தியிலும் மது விற்பனை – ஒருவர் கைது!!

(க.கிஷாந்தன்)

கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா பொரகஸ் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார் என்று நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிபடையினர் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து 124 மதுபானம் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன என்றும் கூறினர்.

நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிபடையினர் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நுவரெலியா மதுவரி திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த  தனிமைப்படுத்தல்  ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டத்துக்குப் புறம்பாகவும் அதிக விலையிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.