கொரோனா மரணங்கள் தொடர்பான போலியான படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய நபர் கைது…

கொரோனா மரணங்கள் தொடர்பான போலியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் தொடர்பான படங்களை இலங்கையில் நிகழ்ந்த மரணங்கள் என போலியான தகவல்களை அவர் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுபோவில வைத்தியசாலையில் கொரோனா மரணங்களினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் அவர் தவறான தகவல்களை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுகொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.